வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சினை: முதல்வர் தீர்வு காணாவிட்டால் கருப்புக்கொடி போராட்டம் - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் எச்சரிக்கை

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சினைக்கு முதல்வர் தீர்வு காணாவிட்டால் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈசுவரன் எச்சரித்துள்ளார். முதல்வரின் கோவை வருகையின் போது வெள்ளலூர் குப்பை கிடங்கை பார்வையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியரிடம் மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈசுவரன் மனு அளித்துள்ளார். அதில், நாளை கோவைக்கு வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சரை வெள்ளலூர் குப்பை கிடங்கையும் கைவிடப்பட்ட வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டிடத்தையும் பார்வையிட அழைத்து வர வேண்டும் என்று கோரியுள்ளார்.

ஈசுவரன் கூறுகையில், "நாளை கோவை வரும் தமிழ்நாடு முதலமைச்சர், கோவையின் முக்கிய பிரச்சினையான வெள்ளலூர் குப்பை கிடங்கை நேரில் வந்து பார்வையிட வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக லட்சக் கணக்கான மக்களைப் பாதிப்பு உள்ளாக்கி இருக்கிற வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனை இன்று வரை தீர்க்கப்படாமல் உள்ளது" என்றார்.



"முதலமைச்சர் வந்தாலும் வராவிட்டாலும் உக்கடம் பாலத்தில் வாகனங்கள் ஓடும். ஆனால் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு முதலமைச்சர் வந்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும். கடந்த முறை முதலமைச்சர் வந்த போது உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம். அவசர வேலைக்காக வந்திருக்கிறார் அவரால் வர முடியாது என்று அதிகாரிகள் சொன்னதால், உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டோம்" என்று அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "நாளை கோவை வருகிற முதலமைச்சர் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு வந்த ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபத்தை தெரிவிக்க வேண்டும். இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.



இறுதியாக, "இந்த முறை வெள்ளலூர் பிரச்சினைக்கு முதலமைச்சர் தீர்வு சொல்லாவிட்டால், அடுத்த முறை முதலமைச்சர் கோவை வரும்போது கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை நடத்துவோம்" என்று ஈசுவரன் எச்சரித்தார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...