கோவை - பரௌனி இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

கோவை மற்றும் பிகார் மாநிலம் பரௌனி இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 6 வரை இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


கோவை: கோவை மற்றும் பிகார் மாநிலம் பரௌனி இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை தொடங்கப்படவுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில் சேவை ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 3 வரை கோவையில் இருந்து பரௌனிக்கும், ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 6 வரை பரௌனியில் இருந்து கோவைக்கும் இயக்கப்படும்.

கோவை - பரௌனி வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06059) செவ்வாய்க்கிழமைகளில் கோவையில் இருந்து புறப்பட்டு, வியாழக்கிழமைகளில் பிற்பகல் 2.30 மணிக்கு பரௌனி நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கமாக, பரௌனி - கோவை சிறப்பு வாராந்திர ரயில் (எண்: 06060) வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.45 மணிக்கு பரௌனியில் இருந்து புறப்பட்டு, திங்கள்கிழமைகளில் அதிகாலை 3.45 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயில் பயணத்தின் போது திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, ஏலூரு, ராஜமுந்திரி, பார்வதிபுரம், ராயகடா, முனிகுடா, சம்பல்பூர், ரூர்கேலா, ஹடியா, ராஞ்சி, மூரி, பகோரோ ஸ்டீல் சிட்டி, தன்பாத், சித்தரஞ்சன், மதுப்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில் சேவை மூலம் கோவை மற்றும் பிகார் மாநிலம் இடையேயான பயணிகள் போக்குவரத்து எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...