பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய குழு கூட்டம் 08.08.2024 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உறுப்பினர்கள் கிராமங்களின் வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.


Coimbatore: பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய குழு கூட்டம் 08.08.2024 அன்று ஒன்றிய குழு தலைவர் விஜய ராணி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுபா மற்றும் சதீஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஒரு மனதாக 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கலந்து கொண்ட உறுப்பினர்கள் கிராமங்களில் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும், சாக்கடை கால்வாய்களை சீரமைக்க வேண்டும், ஊராட்சி ஒன்றிய பகுதியிலுள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி பழுதடைந்த கட்டடங்கள் மற்றும் சுற்றுச்சுவர்களை சீரமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.



மேலும், வேளாண் துறை, தோட்டக்கலை துறை, சுகாதாரத்துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு அந்தந்த துறையில் உள்ள திட்டங்களை எடுத்துரைத்தனர். இந்தக் கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்களான மோகன் குமார், நாகமணி, தங்கமணி, பிரபு, நாகராஜன், அகிலாண்டேஸ்வரி, மாலினி, சிவக்குமார், மோகனாம்பாள் ஆகியோர் பங்கேற்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...