மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை, கல்லாறு - ஹில் குரோவ் பகுதியில் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 9 முதல் 15 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Coimbatore: கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான பாரம்பரியம் மிக்க மலை ரயில் சேவை ஆகஸ்ட் 9 முதல் 15 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு குன்னூர் வழியாக தினமும் காலை இயக்கப்படும் இந்த மலை ரயில் சேவை, கல்லாறு - ஹில் குரோவ் இடையேயான பகுதியில் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் ரயில் பாதையில் கல்லாறு – ஹில் குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டது. இதனால் தண்டவாளத்தில் பாறைகளும், மரங்களும் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான ரயில் சேவை ஆகஸ்ட் 1 முதல் 6 வரை ரத்து செய்யப்பட்டது. பின்னர் ரயில் பாதையில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததால் ஆகஸ்ட் 6 அன்று மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.
தற்போது, கல்லாறு - ஹில் குரோவ் இடையேயான பகுதியில் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால், ஆகஸ்ட் 9 முதல் 15 வரை மீண்டும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பயணிகள் இந்த அறிவிப்பினை கவனத்தில் கொண்டு தங்களது பயணத் திட்டங்களை மாற்றியமைத்துக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு குன்னூர் வழியாக தினமும் காலை இயக்கப்படும் இந்த மலை ரயில் சேவை, கல்லாறு - ஹில் குரோவ் இடையேயான பகுதியில் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் ரயில் பாதையில் கல்லாறு – ஹில் குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டது. இதனால் தண்டவாளத்தில் பாறைகளும், மரங்களும் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான ரயில் சேவை ஆகஸ்ட் 1 முதல் 6 வரை ரத்து செய்யப்பட்டது. பின்னர் ரயில் பாதையில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததால் ஆகஸ்ட் 6 அன்று மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.
தற்போது, கல்லாறு - ஹில் குரோவ் இடையேயான பகுதியில் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால், ஆகஸ்ட் 9 முதல் 15 வரை மீண்டும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பயணிகள் இந்த அறிவிப்பினை கவனத்தில் கொண்டு தங்களது பயணத் திட்டங்களை மாற்றியமைத்துக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.