மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை ஆகஸ்ட் 15 வரை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை, கல்லாறு - ஹில் குரோவ் பகுதியில் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 9 முதல் 15 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


Coimbatore: கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான பாரம்பரியம் மிக்க மலை ரயில் சேவை ஆகஸ்ட் 9 முதல் 15 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு குன்னூர் வழியாக தினமும் காலை இயக்கப்படும் இந்த மலை ரயில் சேவை, கல்லாறு - ஹில் குரோவ் இடையேயான பகுதியில் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் ரயில் பாதையில் கல்லாறு – ஹில் குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டது. இதனால் தண்டவாளத்தில் பாறைகளும், மரங்களும் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான ரயில் சேவை ஆகஸ்ட் 1 முதல் 6 வரை ரத்து செய்யப்பட்டது. பின்னர் ரயில் பாதையில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததால் ஆகஸ்ட் 6 அன்று மீண்டும் ரயில் சேவை தொடங்கியது.

தற்போது, கல்லாறு - ஹில் குரோவ் இடையேயான பகுதியில் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால், ஆகஸ்ட் 9 முதல் 15 வரை மீண்டும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

பயணிகள் இந்த அறிவிப்பினை கவனத்தில் கொண்டு தங்களது பயணத் திட்டங்களை மாற்றியமைத்துக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...