கோவை உக்கடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.481 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 3.8 கிமீ நீளமுள்ள புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Coimbatore: கோவை உக்கடத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த மேம்பாலம் பாலக்காடு நெடுஞ்சாலைகளுக்கு செல்லும் உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே ஏற்பட்டு வந்த கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில் கட்டப்பட்டுள்ளது.

ரூ.481 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த புதிய மேம்பாலம் 3.8 கிலோமீட்டர் நீளம் கொண்டது. மேம்பாலத்தை திறந்து வைத்த பின்னர், முதலமைச்சர் ஸ்டாலின் அங்கிருந்த மக்களை நோக்கி கையை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த திறப்பு விழா நிகழ்வில் ஏராளமான திமுக நிர்வாகிகள், திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த புதிய மேம்பாலம் கோவை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, பயணிகளின் நேரத்தையும் மிச்சப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.481 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த புதிய மேம்பாலம் 3.8 கிலோமீட்டர் நீளம் கொண்டது. மேம்பாலத்தை திறந்து வைத்த பின்னர், முதலமைச்சர் ஸ்டாலின் அங்கிருந்த மக்களை நோக்கி கையை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்த திறப்பு விழா நிகழ்வில் ஏராளமான திமுக நிர்வாகிகள், திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த புதிய மேம்பாலம் கோவை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு, பயணிகளின் நேரத்தையும் மிச்சப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.