மடத்துக்குளம், குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம், குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் குறித்து விளக்கமளித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். கோவையில் நடைபெற்ற தமிழ் புதல்வன் திட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட பின்னர், திருச்சி செல்லும் வழியில் இந்த திடீர் ஆய்வை மேற்கொண்டார்.



அமைச்சர் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளையும் பார்வையிட்டார்.



மாணவர்களிடம் புத்தகங்களைப் படிக்கச் சொல்லி, பள்ளியில் கல்வி எவ்வாறு கற்பிக்கப்படுகிறது என்பதை நேரில் கண்டறிந்தார்.



மாணவர்களிடம் பேசிய அமைச்சர், "தற்போது பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் அனைவரும் பொதுத் தேர்வை எதிர்நோக்கி திட்டமிட்டுப் படிக்க வேண்டும். தமிழக முதல்வர் மாணவர்களுக்கு எண்ணற்ற சலுகைகள் வழங்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் தமிழ் புதல்வன் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இது மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது," என்றார்.

மேலும், "மாணவர்கள் நலனில் தமிழக அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்படுகின்றது. எனவே, மாணவர்கள் அனைவரும் நல்ல முறையில் படித்து வாழ்வில் முன்னேற வேண்டும்," என அமைச்சர் அறிவுறுத்தினார்.



இதைத் தொடர்ந்து, குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அங்கும் மாணவர்களிடம் தமிழ் புதல்வன் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...