உடுமலையில் நகர பாஜக சார்பில் ஆலோசனைக் கூட்டம்: மாவட்ட தலைவர் மங்களம் ரவி பங்கேற்பு

உடுமலையில் நகர பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி கலந்து கொண்டார். கடந்த தேர்தலில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடுமலை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு நகர தலைவர் கண்ணாயிரம் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் உடுமலை நகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய பாஜக பூத் கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி பேசுகையில், "பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சுமார் 2 லட்சம் வாக்குகள் மேல் பெற்றுள்ளது. குறிப்பாக உடுமலை நகராட்சியில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக 6,494 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்து அபார சாதனை புரிந்துள்ளது. இதற்கு நகர நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்றார்.

மேலும் அவர், "வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் சிறப்பாக பணியாற்றி நகராட்சி தலைவர், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பல்வேறு பதவிகளை பிடிக்க வேண்டும். வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வராக அண்ணாமலை வெற்றி பெற அனைவரும் இப்போதிலிருந்தே பாடுபட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.



இந்த கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, மாவட்ட பொது செயலாளர் வடுகநாதன், வர்த்தக அணி மாநில செயலாளர் கார்த்திகேயன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பால்ராஜ், மாவட்ட பிரச்சார அணி தலைவர் சின்ராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராதிகா, நகர பொதுச் செயலாளர்கள் ஐயப்பன், சீனிவாசன், தங்கதுரை, நகர துணைத் தலைவர்கள் உமா குப்புசாமி, கணேஷ் ஆனந்த் செல்வி, கண்ணப்பன், நாச்சியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...