கோவையில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 285 வழக்குகள் பதிவு

கோவை மாநகரில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 285 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், மேலும் தலைகவசம் அணியாத 2456 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர காவல்துறையின் சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாநகரில் விபத்து குறைப்பு தொடர் நடவடிக்கையாக ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் கோவை மாநகர காவல் துறை சார்பாக கடந்த வாரம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் கோவை மாநகர போக்குவரத்து மற்றும் சட்டம், ஒழுங்கு காவல்துறையினரால் தீவிர வாகனச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின் போது குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் தலைகவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டிய வாகன ஓட்டுநர்கள் மீது கடந்த மூன்று நாட்களில் மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள் மீது 285 வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டது.

மேலும், தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 2456 வழக்குகள் பதிவு செய்து அபராதத் தொகையாக ரூ.2 லட்சத்த 45 ஆயிரத்து 600 ரூபாய் வசூலிக்கப்பட்டு அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், இனிவரும் ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் போக்குவரத்து விதிகளை முழுமையாக கடைபிடிக்கச் செய்து அவற்றை "விபத்தில்லா வார இறுதி நாட்களாக்க" நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடித்து முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோவை மாநகர காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...