தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஐசிசிஐ

விவசாய கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஆதரவுகள் பெருகி வருகின்றன. மேலும் தமிழக விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (ஏப்ரல் 25) தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டமும் நடைபெறவுள்ளது.

இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த வணிகர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், நடிகர் சங்கம், ஆட்டோ, பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, தற்போது ஐசிசிஐ கோயம்புத்தூர் சேப்டர்-வும் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிசிஐ கோயம்புத்தூர் சேப்டர் தலைவர் வனிதா மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தில்லியில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக போராடிவரும் தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த போராட்டத்திற்கு ஐசிசிஐ கோயம்புத்தூர் சேப்டர் முழு ஆதரவு அளிக்கிறது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர்களின் கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைப்பதாக தெரிவித்துள்ளார். உடனடியாக விவசாயிகளுக்கு உரிய தீர்வு கிடைக்க வேண்டும்.

இந்த முழு அடைப்பு போராட்டத்தில் வணிகர்கள், லாரி, ஓட்டல் உரிமையாளர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சியான திமுக-வும் ஆதரவு அளித்திருப்பதால் இந்த முழுஅடைப்பு வேலைநிறுத்தம் வெற்றியடைய வாய்ப்புகள் அதிகப்படியாக உள்ளது.

இந்தியாவின் முதுகெழும்பு விவசாயம் என்பதை வார்த்தைகயால் மட்டுமின்றி நடப்பிலும் உறுதிப்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் காலம் தாழ்த்தாமல் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என வனிதா மோகன் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...