பொள்ளாச்சியில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு

பொள்ளாச்சி நகரப் பகுதியில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர். திருவள்ளுவர் திடல், தேர்நிலை திடல் பகுதிகளில் சிலை அமைக்க வலியுறுத்தப்பட்டது.



Coimbatore: பொள்ளாச்சி நகரப் பகுதியில் சட்டமேதை அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பொள்ளாச்சி நகரப் பகுதிகளான திருவள்ளுவர் திடல், தேர்நிலை திடல் போன்ற இடங்களில் அம்பேத்கர் சிலை அமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சமூக இயக்கங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.



இந்நிலையில், இன்று பொள்ளாச்சி சார் ஆட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு முகாமில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல இணைச் செயலாளர் பிரபு தலைமையில் கட்சியினர் சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யாவிடம் மனு அளித்தனர்.

பொள்ளாச்சி நகரப் பகுதியில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...