பொள்ளாச்சியில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு

பொள்ளாச்சி நகரப் பகுதியில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர். திருவள்ளுவர் திடல், தேர்நிலை திடல் பகுதிகளில் சிலை அமைக்க வலியுறுத்தப்பட்டது.



Coimbatore: பொள்ளாச்சி நகரப் பகுதியில் சட்டமேதை அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பொள்ளாச்சி நகரப் பகுதிகளான திருவள்ளுவர் திடல், தேர்நிலை திடல் போன்ற இடங்களில் அம்பேத்கர் சிலை அமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சமூக இயக்கங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.



இந்நிலையில், இன்று பொள்ளாச்சி சார் ஆட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு முகாமில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல இணைச் செயலாளர் பிரபு தலைமையில் கட்சியினர் சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யாவிடம் மனு அளித்தனர்.

பொள்ளாச்சி நகரப் பகுதியில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...