பொள்ளாச்சியில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு

பொள்ளாச்சி நகரப் பகுதியில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர். திருவள்ளுவர் திடல், தேர்நிலை திடல் பகுதிகளில் சிலை அமைக்க வலியுறுத்தப்பட்டது.



Coimbatore: பொள்ளாச்சி நகரப் பகுதியில் சட்டமேதை அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பொள்ளாச்சி நகரப் பகுதிகளான திருவள்ளுவர் திடல், தேர்நிலை திடல் போன்ற இடங்களில் அம்பேத்கர் சிலை அமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சமூக இயக்கங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.



இந்நிலையில், இன்று பொள்ளாச்சி சார் ஆட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு முகாமில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல இணைச் செயலாளர் பிரபு தலைமையில் கட்சியினர் சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யாவிடம் மனு அளித்தனர்.

பொள்ளாச்சி நகரப் பகுதியில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...