பொள்ளாச்சியில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு

பொள்ளாச்சி நகரப் பகுதியில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர். திருவள்ளுவர் திடல், தேர்நிலை திடல் பகுதிகளில் சிலை அமைக்க வலியுறுத்தப்பட்டது.



Coimbatore: பொள்ளாச்சி நகரப் பகுதியில் சட்டமேதை அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பொள்ளாச்சி நகரப் பகுதிகளான திருவள்ளுவர் திடல், தேர்நிலை திடல் போன்ற இடங்களில் அம்பேத்கர் சிலை அமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் சமூக இயக்கங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.



இந்நிலையில், இன்று பொள்ளாச்சி சார் ஆட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு முகாமில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல இணைச் செயலாளர் பிரபு தலைமையில் கட்சியினர் சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யாவிடம் மனு அளித்தனர்.

பொள்ளாச்சி நகரப் பகுதியில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...