போதை ஒழிப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கது - மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்

கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். போதை ஒழிப்பு, ஜவுளித்துறை மற்றும் பங்களாதேஷ் உறவுகள் குறித்து கருத்து தெரிவித்தார்.



கோவை: கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

போதை ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "போதை ஒழிப்பு நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. கஞ்சா அதிகமாக பிடிபட்டது என்று சொன்னால், கஞ்சா நடமாட்டம் அதிகமாகிறது என்று பொருள். அதனை கட்டுப்படுத்துகின்ற அனைத்து நடவடிக்கைகளையும் பார்க்க வேண்டும். முதல்வர் அவர்கள் கஞ்சாவையும் இதர போதை வஸ்துகளையும் ஒழிக்க எடுக்கின்ற அத்தனை முயற்சிகளையும் நான் வரவேற்கிறேன். அனைவரும் வரவேற்க வேண்டும்," என்றார்.

ஜவுளித்துறை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, "தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி வருகிறது. இது ஜவுளித் தொழில் வெற்றி பெறுவதற்கு உதவுவதாக அமையாது. ஜவுளித்துறைக்கு அதிகமான உதவிகளை மாநில அரசு செய்தால்தான் இந்தத் தொழில் காலத்தை கடந்து நிற்கும். உலகம் முழுவதும் ஜவுளித் தொழில் வளர்ந்து வருகிறது. பங்களாதேஷில் இருந்து வியட்நாம் வரை இன்றைக்கு ஜவுளித் தொழில் பிரமாண்டமாக இருந்து வருகிறது. பர்மாவில் கூட ஜவுளித் துறையில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது," என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர், "நம்முடைய பகுதியை விட்டு ஜவுளித் தொழில் வேறு நாட்டிற்கோ அல்லது வேறு மாநிலத்திற்கோ சென்று விடக்கூடாது என்று நினைத்தால், மாநில அரசு ஜவுளித் துறை சார்ந்த அத்தனை பேரையும் அழைத்து அவர்களது குறைகளை முழுமையாக கேட்டு உரிய உதவிகளை செய்ய வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

பங்களாதேஷ் உறவுகள் குறித்து பேசிய ஆளுநர், "பங்களாதேஷுடன் நீண்ட நெடிய உறவுகள் இருந்த போதிலும், எப்பொழுதெல்லாம் பங்களாதேஷில் மதவாத சக்திகள் கை ஓங்குகிறதோ, அப்பொழுதெல்லாம் நம்முடைய தேசத்தோடு இருக்கின்ற நெருக்கமான உறவுகளுக்கு சவால் வருகிறது. அதனை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். உலக அமைதிக்கு பங்களாதேஷும் இந்திய உறவும் மிகவும் முக்கியமானவை. இந்த உறவு மேலும் வலுப்பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்.

பொன் மாணிக்கவேல் வழக்கு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, "சிலை வழக்கு எந்த சூழலில் ஏற்பட்டது என தெரியவில்லை. எந்த அளவுக்கு முடிவு பெற்றுள்ளது என்பதை அறிந்த பிறகு பொறுத்திருந்து பார்ப்போம்," என்று பதிலளித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...