கோவையில் ரூ.167.25 கோடி மதிப்பீட்டில் செம்மொழிப்பூங்கா: ஆணையர் ஆய்வு

கோவை காந்திபுரத்தில் ரூ.167.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் செம்மொழிப்பூங்கா பணிகளை மாநகராட்சி ஆணையர் M சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு செய்தார். உதவி ஆணையர்கள் மற்றும் பொறியாளர்கள் உடனிருந்தனர்.


Coimbatore: கோவை மாநகராட்சிக்குட்பட்ட காந்திபுரம், மத்திய சிறைச்சாலை வளாகத்தில் ரூ.167.25 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் செம்மொழிப்பூங்கா கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, உதவி ஆணையர்கள் செந்தில்குமரன் (மத்தியம்), இளங்கோவன் (பொ) (தெற்கு), உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.



செம்மொழிப்பூங்கா திட்டம் கோயம்புத்தூர் நகரின் முக்கிய மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பூங்கா முடிவடைந்தவுடன், நகர மக்களுக்கு ஒரு புதிய பொழுதுபோக்கு இடமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



ஆணையாளர் M சிவகுரு பிரபாகரன், கட்டுமானப் பணிகளின் தரம் மற்றும் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்தார். மேலும், திட்டப்பணிகளை விரைவுபடுத்த தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...