உடுமலை மாணவி இரண்டாவது முறையாக தேசிய துப்பாக்கி சூடும் போட்டியில் தங்கம் வென்று சாதனை

திருப்பூர் மாவட்டம் ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி மாணவி பிரீத்தி, தேசிய அளவிலான துப்பாக்கி சூடும் போட்டியில் இரண்டாவது முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற இப்போட்டியில் 296 மாணவர்கள் பங்கேற்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி மாணவி பிரீத்தி, தேசிய அளவில் நடைபெற்ற துப்பாக்கி சூடும் போட்டியில் இரண்டாவது முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பிரீத்தி கடந்த ஆண்டு மார்ச் 2023-ல் துப்பாக்கி சுடும் பயிற்சியைத் தொடங்கினார். முதலில் மாநில அளவிலான தேசிய மாணவர் படைக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றார். பின்னர் 5TN Girls Battalion NCC அலுவலகத்தின் மூலம் தொடர் பயிற்சி மேற்கொண்டார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அதைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்தின் மௌலங்கரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

கடந்த மாதம் திருச்சி NIT கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் மீண்டும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் தேசிய அளவில் 296 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

இச்சாதனைக்காக உடற்கல்வித்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு தேசிய மாணவர் படை தலைவர் ஆகியோர் பிரீத்தியை சென்னைக்கு அழைத்து பாராட்டினர். இதைத் தொடர்ந்து, மாணவியை கௌரவிக்கும் விதமாக கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.



இவ்விழாவில் 5TN Girls Battalion Commanding Officer J.M ஜோஷி கலந்துகொண்டு மாணவி பிரீத்தியையும், தேசிய மாணவர் படை அலுவலர் கேப்டன் முனைவர் கற்பகவள்ளியையும் பாராட்டினார். கல்லூரி நிர்வாக இயக்குனர் முனைவர் மஞ்சுளா, கல்லூரி முதல்வர் முனைவர் பரமேஸ்வரி ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் வரலாற்று துறை இணை பேராசிரியரும் தேசிய மாணவர் படை அலுவலருமான கேப்டன் முனைவர் கற்பகவள்ளி மேற்கொண்டார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...