உதகை குட்செப்பர்டு சர்வதேசப் பள்ளிக்கு சி.ஐ.எஸ் சர்வதேச அங்கிகாரம்


நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகளில் முதலிடம் வகிக்கும் குட்செப்பர்டு சர்வதேசப் பள்ளியில், மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளிலும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகிறது.



குறிப்பாக துப்பாக்கிசுடுதல் போட்டிகளில் ஆண்டு தோறும் இப்பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் சாதனை படைத்து வருகின்றனர்.

மேலும், இப்பள்ளியில் கடல் மட்டத்திலிருந்து 2250 மீட்டர் உயரத்தில் அதுவும் இந்தியாவிலேயே அதிக உயரத்தில் 70 மீட்டர் பவுண்டரிகளைக் கொண்ட புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.



இந்தியாவிலேயே உதகை குட்செப்பர்டு சர்வதேச பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மைதானம் தான் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் இங்கு ஐபிஎல் உட்பட பிற போட்டிகளை நடத்த வாய்ப்புள்ளது. பள்ளி வளாகத்தில் துப்பாக்கி சுடும் உள் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பள்ளியில் அனைத்து பயிற்சிகளும் சிறந்த முறையில் அளிக்கப்படும் நிலையில் உள்கட்டமைப்பு உட்பட அனைத்து வசதிகளும் உள்ளதால், இந்தியாவில் உள்ள சிறந்த சர்வேதேச பள்ளிகளில் குட்செப்பர்டு சர்வதேச பள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்திய அளவில் முதல் சர்வதேச பள்ளியாக (கவுன்சில் ஆப்இன்டர் நேசனல் பள்ளி) சி.ஐ.எஸ் சர்வதேச சான்றிதழ் இப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய புதுமையான கல்வி முறையை இப்பள்ளி மாணவ மாணவிகள் சிறப்பாக பயில இவ்விருது வழி வகை செய்யும் என குட்செப்பர்டு சர்வதேசப் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில், இந்த சர்வதேச அங்கிகாரம் பெற்றிருப்பதன் மூலம் சுதந்திரமான உலகளாவிய கல்வி நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கும் திறம்பட கல்வி முறைகளை புதுப்பிக்கவும் முடியும்.

உலகத் தரமான கல்வி சர்வதேச திட்டங்களை இப்பள்ளி வழங்கும். 2010 ஆண்டில் இருந்து சி.ஐ.எஸ்-யில் உறுப்பினராக உள்ள குட்செப்ர்டு சர்வதேச பள்ளி இந்த சர்வதேச அங்கிகாரம் பெற மூன்று ஆண்டுகள் ஆனது. பல்வேறு சிறப்பான ஆய்வுகளுக்கு பிறகு சர்வதேச தர அங்கீகாரம் பெற்று குட்செப்பர்டு பள்ளி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...