மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு இல்லை: கோவையில் மதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

கோவையில் மதிமுக சார்பில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு இல்லை என்று கூறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூன் ராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.


கோவை: மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கவில்லை என்று கூறி, ஒன்றிய அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த மதிமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.



அதன் அடிப்படையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட மதிமுகவினர் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மதிமுக மாநில அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூன் ராஜ் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகளும் 50க்கும் மேற்பட்ட மதிமுக தொண்டர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோவை மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...