கோவை கூடலூரில் மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்பு முகாம்: 184 பயனாளிகளுக்கு ரூ.6.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

கோவை கூடலூரில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. 184 பயனாளிகளுக்கு ரூ.6.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பல்வேறு துறைகளின் கண்காட்சிகளும் இடம்பெற்றன.


Coimbatore: கோவை கூடலூர் நகராட்சி கேஸ் கம்பெனி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் அனைவரையும் வரவேற்று பேசினார். கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு வாழ்த்துரை வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையேற்று மருத்துவத்துறை, தோட்டக்கலை, மகளிர் சுய உதவிக்குழுவினர், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் அமைத்திருந்த கண்காட்சிகளை பார்வையிட்டார்.



நிகழ்வில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் முன்னிலை வகித்து பேசினார். அவர் தனது உரையில், கூடலூர் உள்ளிட்ட கோவை மாவட்டத்தின் பல கிராமங்கள் மலையிட பாதுகாப்பு குழும கட்டுப்பாட்டில் உள்ளதால் (அ கா - கிராமங்கள்) அங்குள்ள இடங்கள் மற்றும் வீடுகளை வாங்கவோ, விற்கவோ முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுவதாகக் கூறினார். இந்த நிலையை மாற்றி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி பேசுகையில், மலையடிவாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்காக வீட்டுவசதி துறை அமைச்சர் ஒரு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், 300 சதுர அடி வரை வீடு கட்ட தற்போது அ.கா தேவையில்லை என்றும் குறிப்பிட்டார். கோவையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் வருகைப் பதிவு 90 சதவீதமாக உள்ளதை குறைந்தது 95 சதவீதமாக உயர்த்த பெற்றோர்கள் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நிகழ்வில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இவற்றில் வருவாய் துறையின் இலவச வீட்டுமனை பட்டா, ஆதி திராவிடர் நலத்துறையின் தனிநபர் வன அலுவலக உரிமை பட்டா, தையல் எந்திரம், குடும்ப அட்டை, மகளிர் திட்டத்தின் கீழ் சுய உதவி குழுவினருக்கான உதவிகள், தோட்டக்கலை மற்றும் வேளாண்மை துறை மானியங்கள், முதலமைச்சர் காப்பீட்டு திட்டம், மகப்பேறு கால ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவை அடங்கும். மொத்தம் 184 பயனாளிகளுக்கு சுமார் ரூபாய் 6 கோடியே 10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்வின் முடிவில், மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்த நிகழ்வில் கூடலூர் நகராட்சி ஆணையாளர் மனோகரன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும், பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...