78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் 110 காலால்படை பட்டாலியன் நடத்திய திரங்கா பைக் பேரணி

கோவை ரெட்ஃபீல்ட்ஸில் உள்ள 110 காலால்படை பட்டாலியன் பிரதேச ராணுவத்தின் 75-வது ஆண்டு மற்றும் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திரங்கா பைக் பேரணி நடைபெற்றது. 80-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை ரெட்ஃபீல்ட்ஸில் உள்ள 110 காலால்படை பட்டாலியன் பிரதேச ராணுவத்தின் 75-வது ஆண்டு மற்றும் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திரங்கா பைக் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை 2 இன் சி கமாண்டர் விக்ரம் சிங் துவங்கி வைத்தார்.

பேரணியில் 80-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இருசக்கர வாகனங்களில் தேசிய கொடி ஏந்தி பங்கேற்றனர். இவர்கள் 110 காலால் பட்டாலியன் பிரதேச ராணுவத்தின் வளாகத்தில் இருந்து புறப்பட்டு ரெட் பீல்ட்ஸ் சாலை, ரேஸ்கோர்ஸ், வாலாங்குளம் ஆகிய பகுதிகளில் பேரணியாக சென்றனர்.



பேரணியில் இருசக்கர வாகனங்களுக்கு பின்னால் ராணுவ வாகனம் ஒன்றும் சென்றது. அந்த வாகனத்தில் தேசியக் கொடிகள் ஏந்தப்பட்டிருந்தன. மேலும், ஒலிபெருக்கி மூலம் தேசப்பற்று பாடல்கள் ஒலிக்கப்பட்டன. இது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.



இந்த திரங்கா பைக் பேரணி மூலம் மக்களிடையே தேசப்பற்றை வளர்ப்பதும், 78-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை சிறப்பிப்பதும் நோக்கமாக இருந்தது. பேரணியில் பங்கேற்ற ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...