கோவை துடியலூரில் இன்று முதல் பிரம்மாண்ட துபாய் சிட்டி பொருட்காட்சி நடைபெறவுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும் இந்த கண்காட்சியில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறும்.
Coimbatore: கோவை துடியலூர் பகுதியில் பிரம்மாண்ட துபாய் சிட்டி எனும் பொருட்காட்சி இன்று (ஆகஸ்ட் 15 ) முதல் நடைபெற உள்ளது. வி.ஜி. மருத்துவமனை அருகில் உள்ள ரிலையன்ஸ் ஸ்மார்ட் எதிரில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பொருட்காட்சியில் துபாய் சிட்டியில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா உள்ளிட்ட பிரத்யேக மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அதிசயங்களை தத்ரூபமாக உருவாக்கி, மின் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டுள்ளது.

கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான துரை, பங்குதாரர் இஸ்மாயில், ஜியாவுல் ஹக் ஆகியோர் கூறுகையில், "துபாய் நாட்டை நேரில் பார்க்காதவர்கள் பொருட்காட்சிக்கு வந்தால் துபாய் நகரில் உள்ளதை நேரில் காண்பது போன்று அனுபவத்தை பெறுவார்கள்" என்றனர்.
இந்த பொருட்காட்சியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், பிரம்மாண்ட ராட்டினம், உணவு அரங்கங்கள், ஸ்னோ வேர்ல்ட், பேய் வீடு, 3D கண்காட்சி அரங்குகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், உணவுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக்கான அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
டி.டி. எண்டர்டெயின்மண்ட் சார்பாக நடத்தப்படும் இந்த துபாய் சிட்டி பொருட்காட்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. கோவை வாழ் மக்களுக்கு இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு கண்காட்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பொருட்காட்சியில் துபாய் சிட்டியில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா உள்ளிட்ட பிரத்யேக மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அதிசயங்களை தத்ரூபமாக உருவாக்கி, மின் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டுள்ளது.
கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான துரை, பங்குதாரர் இஸ்மாயில், ஜியாவுல் ஹக் ஆகியோர் கூறுகையில், "துபாய் நாட்டை நேரில் பார்க்காதவர்கள் பொருட்காட்சிக்கு வந்தால் துபாய் நகரில் உள்ளதை நேரில் காண்பது போன்று அனுபவத்தை பெறுவார்கள்" என்றனர்.
இந்த பொருட்காட்சியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், பிரம்மாண்ட ராட்டினம், உணவு அரங்கங்கள், ஸ்னோ வேர்ல்ட், பேய் வீடு, 3D கண்காட்சி அரங்குகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், உணவுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக்கான அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
டி.டி. எண்டர்டெயின்மண்ட் சார்பாக நடத்தப்படும் இந்த துபாய் சிட்டி பொருட்காட்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. கோவை வாழ் மக்களுக்கு இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு கண்காட்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.