கோவை புரானியில் 78வது சுதந்திர தின விழா: திமுக செயலாளர் நா.கார்த்திக் தேசியக் கொடியேற்றினார்

கோவை புரானி காலனியில் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திமுக செயலாளர் நா.கார்த்திக் தேசியக் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். பல்வேறு சமூக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை புரானி காலனியில் உள்ள "மஸ்ஜித் உல் குத்பி" புரானி-தாவூதி போரா ஜமாஅத் அசோசியேசன் சார்பில் 78வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு 2024 ஆகஸ்ட் 15 அன்று காலை 7.30 மணியளவில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்.எல்.ஏ.), தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அவர் தனது சிறப்புரையில், அனைவருக்கும் 78வது சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.



இந்நிகழ்ச்சியில் கோவை புரானி தவூதிபோரா அசோசியேசன் சங்க நிர்வாகிகள் தலைவர் ஷேக் மோயிஸ் காட்டாவாலா, பி.ஆர். செயலாளர் அலி அஸ்கர், பி.ஜி.ஐ.கேப்டன் ஹூசேபா ஆகியோர் தலைமை வகித்தனர்.

மேலும், 27வது வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால், மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் இரா.தனபால், 27வது வார்டு துணைச் செயலாளர் அ. செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



வட்டப் பிரதிநிதிகள் வேலுச்சாமி, ரமேஷ் குமார், மாநகர் மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் லோகேஸ்வரி, கழக மூத்த முன்னோடிகள் கிருஷ்ணமூர்த்தி, கங்குவார் சீனு, எல் எம் டபிள்யூ சீனு, புருஷோத்தமன், அக்பரலி, நடேசன், தேசிங்கு ராஜன் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

திமுக மகளிர் அணியைச் சேர்ந்த திலகவதி, அன்பரசி, விஜயகுமாரி, விஜயா உள்ளிட்டோரும், புரானி-தாவூதிபோரா அசோசியேசன் நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் தாவூதிபோரா இஸ்லாமிய பொதுமக்கள் பலரும் இந்த சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...