விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டத்தில் வணிகர்கள், தனியார் பேருந்து, ஆட்டோ, லாரி உரிமையாளர்கள், அரசியர் கட்சியினர், ஓட்டல் கடை நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளன. இதில், அரசுப் பேருந்துகளைத் தவிர தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்டவை இயக்கப்படாததால் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனிடையே, நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. நீலகிரி முழுவதும் அரசுப் பேருந்துகளைத் தவிர சுற்றுலா வாகனங்களும், ஆட்டோக்களும் இயங்கவில்லை. இதனால் நீலகிரி, குன்னூர் பகுதிக்கு சுற்றுலா வந்த பயணிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
மேலும், குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் கோடை விடுமுறையினை கழிக்க குன்னூர் வந்த சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதனிடையே, நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. நீலகிரி முழுவதும் அரசுப் பேருந்துகளைத் தவிர சுற்றுலா வாகனங்களும், ஆட்டோக்களும் இயங்கவில்லை. இதனால் நீலகிரி, குன்னூர் பகுதிக்கு சுற்றுலா வந்த பயணிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
மேலும், குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் கோடை விடுமுறையினை கழிக்க குன்னூர் வந்த சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.