கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 78-ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 78-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. முதன்மைச் செயலர் க.முருகையா தேசியக்கொடியை ஏற்றினார். துணைவேந்தர் ப.வெங்கடாசலபதி சிறப்புரையாற்றினார். கற்பகம் சேவா விருது வழங்கப்பட்டது.


Coimbatore: கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் நாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயலர் க.முருகையா தேசியக்கொடியை ஏற்றிவைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

விழாவில் சிறப்புரையாற்றிய துணைவேந்தர் முனைவர் ப.வெங்கடாசலபதி, சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட பெரியோர்களின் தியாகம் என்றும் போற்றத்தக்கது என்று குறிப்பிட்டார். மேலும், அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தைப் பேணுகின்ற வகையில் நாட்டுப்பற்றும், சமுதாயப் பொறுப்புணர்வும் கொண்டு இளைஞர்கள் சிறந்த குடிமக்களாக விளங்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.



விழாவில் பதிவாளர் முனைவர் சு.இரவி முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில், மத்திய மக்கள் தொடர்பகத்தின் கள விளம்பரத்துறை அலுவலர், கோயம்புத்தூர் எஸ்.ஆர்.சந்திரசேகரனுக்கு அவரது சிறந்த சேவைக்காக கற்பகம் சேவா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.



இவ்விழாவில் கல்லூரியின் முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். சுதந்திர தின கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடைபெற்றன.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...