உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நல சங்கத்தின் 78-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நல சங்கம் 78-வது சுதந்திர தின விழாவை நேதாஜி மைதானத்தில் கொண்டாடியது. விழாவில் தேசியக் கொடியேற்றம், அணிவகுப்பு மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கத்தின் சார்பில் 78-வது சுதந்திர தின விழா நேதாஜி மைதானத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில் முன்னாள் ராணுவ நல சங்கத் தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அரிமா சங்க அறக்கட்டளை சேர்மன் நீலகண்டன் தேசியக் கொடியேற்றினார்.



முன்னதாக, நாயப் சுபேதார் நடராஜ் தலைமையில் சுரேஷ் பிரகாஷ் உள்ளிட்டோர் அணிவகுப்பு நடத்தினர். நிகழ்ச்சியில் நேதாஜி நடைப்பயிற்சி நிர்வாகிகள், விளையாட்டுப் பயிற்சியாளர்கள்,



இந்திய முன்னாள் ராணுவ வீரர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.





மேலும், ஓவியர் கனிமொழி என்ற மாணவி 78 சுதந்திர வீரர்களின் உருவப்படங்களை வரைந்து காட்சிப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் உடுமலை முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்கத்தின் செயலாளர் சக்திவேல், பொருளாளர் சிவகுமார், நாயப்சுபேதார் நடராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...