மின்னணு குடும்ப அட்டைகளை இ-சேவை மையத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் தகவல்

புதிய மின்னணு குடும்ப அட்டைகள் 9,55,008 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருவதுடன் புதிய விண்ணப்பதாரர்கள் அரசு இ-சேவை மையத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர், 110 விதியின் கீழ் அறிவித்தபடி, பொது விநியோகத் திட்டம் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணியிணை முதலமைச்சர் துவக்கிவைத்ததை அடுத்து கோவை மாவட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9,55,008 குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது. 

அதன் ஒரு பகுதியாக தற்போது குடும்ப அட்டை இல்லாத குடும்பங்களுக்கு அரசு இ-சேவை மையத்தில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. அங்கு சென்று பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...