புதிய மின்னணு குடும்ப அட்டைகள் 9,55,008 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருவதுடன் புதிய விண்ணப்பதாரர்கள் அரசு இ-சேவை மையத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர், 110 விதியின் கீழ் அறிவித்தபடி, பொது விநியோகத் திட்டம் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணியிணை முதலமைச்சர் துவக்கிவைத்ததை அடுத்து கோவை மாவட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9,55,008 குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக தற்போது குடும்ப அட்டை இல்லாத குடும்பங்களுக்கு அரசு இ-சேவை மையத்தில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. அங்கு சென்று பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர், 110 விதியின் கீழ் அறிவித்தபடி, பொது விநியோகத் திட்டம் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணியிணை முதலமைச்சர் துவக்கிவைத்ததை அடுத்து கோவை மாவட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9,55,008 குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக தற்போது குடும்ப அட்டை இல்லாத குடும்பங்களுக்கு அரசு இ-சேவை மையத்தில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. அங்கு சென்று பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.