கோவையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவையிலும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய் துறை உள்ளிட்ட 64 துறையை சேர்ந்த அரசு ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோவை மாவட்டத்தில் 5 ஆயிரம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதாகவும், கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த கட்டமாக சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர். இந்த போராட்டம் காரணமாக பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவையிலும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை, வருவாய் துறை உள்ளிட்ட 64 துறையை சேர்ந்த அரசு ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோவை மாவட்டத்தில் 5 ஆயிரம் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதாகவும், கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த கட்டமாக சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர். இந்த போராட்டம் காரணமாக பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.