கோவை இடுக்கண் குடி மாரியம்மன் கோவிலில் ஆறரை லட்சம் ரூபாய் மற்றும் நவதானியங்களால் சிறப்பு அலங்காரம்

கோவை இடுக்கண் குடி மாரியம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஆறரை லட்சம் ரூபாய் மற்றும் நவதானியங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் காணிக்கையாக பெறப்பட்ட பணம் மறுநாள் திருப்பி அளிக்கப்படும்.



Coimbatore: கோவை தாமஸ் வீதியில் அமைந்துள்ள இடுக்கண் குடி மாரியம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோவில் கருவறை முழுவதும் ஆறரை லட்சம் ரூபாய் பணத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அம்மன் வீற்றிருக்கும் வாகனமான அன்னபட்சி முழுவதும் நவதானியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு அலங்காரம் பக்தர்களை கவர்ந்துள்ளது.



ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவில் நிர்வாகிகள் கூறுகையில், "அலங்காரத்திற்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து பணமும் பக்தர்கள் அளித்த காணிக்கையாகும். நாளை இந்த பணம் அனைத்தும் அந்தந்த பக்தர்களுக்கு பூஜை செய்து பிரசாதங்களுடன் திருப்பி அளிக்கப்படும்" என்றனர்.



இந்த சிறப்பு அலங்காரத்தைக் காண பெருமளவில் பக்தர்கள் கோவிலுக்கு வந்து சென்றனர். ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு அலங்காரம் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...