மலைப்பாதையில் பழுதடைந்த உதகை ரயில்- சுற்றுலாப் பயணிகள் அவதி

உதகை மலை ரயில் மலைப்பாதையின் நடுக்காட்டில் பழுதாகி நின்றதால் சுமார் 8 மணி நேரம் உணவு மற்றும் தண்ணீரின்றி சுற்றுலாப்பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு மலை ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. அடர்ந்த வனப்பகுதியின் வழியாக மலை ரயில் செல்லும் ரம்மியமான அனுபவங்களைப் பெற தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவர்.

மேலும், தற்போது கோடை விடுமுறையினை முன்னிட்ட நாளொன்றுக்கு ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரி, குன்னூர், உதகை உள்ளிட்ட பகுதிகளில் குவிந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் விரும்புவதும் நீலகிரி மலை ரயில் பயணமே.

இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் 282 பயணிகளுடன் மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டது. ரயில், ஆர்டலி அருகே சென்றுகொண்டிருந்த போது எஞ்சின் உந்து சக்தி குறைவால் ரயில் மலைப்பாதையில் நடுவழியில் பழுதாகி நின்றது. 

இதனைத்தொடர்ந்து, குன்னூரில் இருந்து மாற்று என்ஜின் கொண்டுவரப்பட்டு மலை ரயில் மீண்டும் இயக்கப்பட்டது.

முன்னதாக, சுமார் 8 மணி நேரம் நடுக்காட்டில் ரயில் பழுதாகி நின்றதால் உணவு, தண்ணீர் கிடைக்காமல் சுற்றுலாப்பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...