பொள்ளாச்சி அருகே கோட்டூர் பேரூராட்சியில் திமுக கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து போராட்டம்

பொள்ளாச்சி அருகே கோட்டூர் பேரூராட்சியில் திமுக தலைவர் ராமகிருஷ்ணனுக்கு எதிராக 12 திமுக கவுன்சிலர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.



கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள கோட்டூர் பேரூராட்சியில் திமுக பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணனுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த 12 கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

21 வார்டுகள் கொண்ட கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தில் திமுக கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பேரூராட்சியில் ஒப்பந்தம் மற்றும் டெண்டர் முறைகேடுகள், வரவு செலவு கணக்குகளை சரியாக சமர்ப்பிக்காதது போன்ற பல்வேறு ஊழல்கள் நடைபெறுவதாக குற்றம்சாட்டினர்.



கோட்டூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசிமா பானுவிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய கவுன்சிலர்கள், திமுக பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணனை மாற்ற வேண்டும் என்று கோஷமிட்டனர். ஆளும் கட்சி உறுப்பினர்களே தங்கள் கட்சி தலைவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...