கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 2162 பேர் கைது

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு தற்காலிகமாக தற்போது தமிழகம் திரும்பியுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதில், பல்வேறு அரசியல் கட்சியினர், வணிகர் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நடிகர் சங்கம், லாரி, ஆட்டோ, தனியார் பேருந்து உள்ளிட்டு அனைத்துத் தரப்பினரும் பங்கேற்றுள்ளனர்.



மேலும், தமிழகத்தில் ஆங்காங்கே அரசியல் கட்சியினர் ஒன்றிணைந்து விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல், ரயிவே நிலையம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றது. இதில், திமுக, கம்யூனிஸ்ட், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் கைதாகினர்.

கோவை மாவட்டத்தைப் பொருத்தவரையில் பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகள் உட்பட 1283 பேர் கைது செய்யப்பட்டள்ளனர். அதில் 35 பெண்கள். மற்றும்  கோவை மாநகர அளவில் 17 இடங்களில் பேராட்டங்களில் ஈடுபட்ட 27 பெண்கள் உட்பட 879 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...