கோவையில் ஒருவழிச் சாலையில் அரசு பேருந்து - சரக்கு ஆட்டோ மோதல்: பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தப்பிய பயணிகள்

கோவை குனியமுத்தூரில் ஒருவழிச் சாலையில் அரசு பேருந்து மற்றும் சரக்கு ஆட்டோ மோதல் சம்பவம் நடந்துள்ளது. பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. சரக்கு ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்கு பதிவு.



கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் அரசு பேருந்து மற்றும் சரக்கு ஆட்டோ மோதல் சம்பவம் நடந்துள்ளது. பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழக அரசு பேருந்து ஒன்று, கோவை குனியமுத்தூர் விஜயலட்சுமி மில் அருகே உள்ள ஒருவழிப் பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, அதே பாதையில் எதிர்திசையில் வந்த சரக்கு ஆட்டோ ஒன்று, சாலையைக் கடக்க முயன்றது.

வேகமாக வந்த அரசு பேருந்து ஓட்டுநர், சரக்கு ஆட்டோவை கவனித்ததும், உடனடியாக பிரேக் அழுத்தி பேருந்தை நிறுத்தினார். எனினும், பேருந்தின் பின்பகுதி சரக்கு ஆட்டோவின் பின்புறத்தில் மோதியது. இந்த மோதலில் சரக்கு ஆட்டோ சேதமடைந்தது.

பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியமான செயல்பாட்டால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஒருவழிப் பாதையில் விதிமுறைகளை மீறி வந்த சரக்கு ஆட்டோ ஓட்டுநர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Newsletter

கிணத்துக்கடவில் ஜூலை 23-24ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் மனுக்கள் பெறுகிறார்

கிணத்துக்கடவு வட்டத்தில் ஜூலை 23-24 தேதிகளில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார்  தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்...

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...