வெள்ளலூர் குப்பை கிடங்கு: செப்டம்பர் 3க்குள் நிரந்தர தீர்வு அறிக்கை தாக்கல் செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு நிரந்தர தீர்வு காண செப்டம்பர் 3ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சி உறுதிமொழிகளை நிறைவேற்றாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவது குறித்து செப்டம்பர் 3ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு வெள்ளலூர் குப்பை கிடங்கை அகற்றும்படி பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை கோவை மாநகராட்சி பின்பற்றவில்லை. ஒரு ஆண்டில் குப்பை கிடங்கிற்கு தீர்வு ஏற்படுத்தப்படும் என கொடுத்த உறுதிமொழியும் நிறைவேற்றப்படவில்லை.

இதனால், மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈஸ்வரன் 2022ஆம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார். இந்த வழக்கு சென்னை பசுமை தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்டு தொடர்ந்து நடந்து வந்தது.

கடந்த ஆகஸ்ட் 14 அன்று நடைபெற்ற விசாரணையில், ஆறு ஆண்டுகளாகியும் குப்பைகளை அகற்றாதது குறித்து பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது. இது குறித்து தெளிவான விரிவான அறிக்கையை அடுத்த விசாரணைக்குள் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

கோவை மாநகராட்சி ஆணையருடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி இதற்கான தீர்வை எட்ட வேண்டுமென நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளருக்கு பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் செப்டம்பர் 3 அன்று நடைபெறவுள்ளது.

இது குறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில், "கோவை மாநகராட்சி, 36 இடங்களில் MCC (Micro Composting Centre) ஏற்படுத்தப்பட்டு ஒவ்வொன்றும் 5 டன் அளவுள்ள குப்பைகளை மேலாண்மை செய்வதாக தவறான தகவலை பசுமை தீர்ப்பாயத்தில் அளித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். வெள்ளலூர் குப்பை கிடங்கில் குப்பைகள் கொட்டுவது 81 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைந்துவிட்டதாக கோவை மாநகராட்சி பசுமை தீர்ப்பாயத்தில் மேலும் தவறான தகவலை அளித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அடுத்த விசாரணைக்கு முன்பாக கோவை மாநகராட்சி கால நிர்ணயத்துடன் கூடிய செயல் திட்ட அறிக்கையை பசுமை தீர்ப்பாயத்திற்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...