கோவை அவினாசி சாலையில் உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணி: போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

கோவை அவினாசி சாலையில் உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணி காரணமாக, ஆகஸ்ட் 18 முதல் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்படுகிறது. வாகன ஓட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


கோவை: கோவை மாநகரில், அவினாசி சாலை ஹோப்ஸ் பகுதி இரயில்வே மேம்பாலம் அருகில் நாளை (18.08.2024) முதல் உயர்மட்ட மேம்பால தூண் கட்டுமானப் பணி தொடங்க உள்ளது. இதனால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காந்திபுரத்தில் இருந்து லட்சுமி மில்ஸ் SNR சந்திப்பு, PSG College வழியாக அவினாசி மார்க்கம் செல்லும் வாகனங்கள் Poineer Mill ரோடு, அவினாசி ரோடு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, காந்திமாநகர் மேம்பாலம், காந்திமாநகர் சந்திப்பு, தண்ணீர் பந்தல் ரோடு S Bend சென்று வலதுபுறம் திரும்பி Tidel Park ரோடு மற்றும் கொடிசியா ரோடு வழியாக அவினாசி சாலையை அடையலாம்.

R.S.புரம், தடாகம் ரோடு, 100 அடி சாலை, சிவானந்தா காலனி பகுதிகளில் இருந்து அவினாசி சாலை வழியாக விமான நிலையம், திருப்பூர், ஈரோடு, சேலம் செல்லும் வாகன ஓட்டிகள் சத்தி ரோடு, கணபதி, விளாங்குறிச்சி, காளப்பட்டி நால்ரோடு வழியாக அவினாசி ரோடு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உக்கடம், ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம் செல்லும் வாகனங்கள் சுங்கம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், ஒண்டிபுதூர் வழியாக L&T Bypass சென்று குறிப்பிட்ட இடங்களுக்கு எளிதாக செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு வாகன ஓட்டுநர்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த மாற்று ஏற்பாடுகள் மூலம் கட்டுமானப் பணி காலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...