கொல்கத்தா மருத்துவர் கொலை: கோவை கே.ஜி மருத்துவமனையில் கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை கே.ஜி மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.



கோவை: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கோவையில் உள்ள கே.ஜி மருத்துவமனை மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

கொல்கத்தாவில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.



கோவையில் உள்ள கே.ஜி மருத்துவமனையில் சுமார் 20க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கே.ஜி மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவச்சலம், "மருத்துவர்கள் கொலை நடப்பது என்பது முட்டாள்கள் கையில் தேசம் இருக்கிறது என்பதை குறிக்கிறது" என்று கூறினார்.

மேலும் அவர், "காவல்துறையும் அரசு நிர்வாகமும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். கஞ்சாவை ஒழிக்க வேண்டும். மதுபானங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்த விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. மருத்துவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...