தமிழகத்தில் பெரிய ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்து புதியவை உருவாக்க வேண்டும் - பொள்ளாச்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

பொள்ளாச்சியில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், தமிழகத்தில் பெரிய ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்து புதியவற்றை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.



கோவை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்கத்தின் கோவை மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் முப்பெரும் விழா பொள்ளாச்சியில் நடைபெற்றது. சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



இந்தக் கூட்டத்தில் பணியின் போது ஓய்வு பெற்றவர்களுக்கும், புதிய பதவி உயர்வு பெற்றோர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



கலைஞரின் கனவு இல்லத் திட்டம், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம், ஊரக வேலை உறுதித் திட்டம் போன்ற சிறப்புத் திட்டங்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்கள் மற்றும் புதிய கட்டமைப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் புதிதாக மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டு, அதிகமான ஊராட்சி ஒன்றியங்கள் இணைக்கப்பட்டு வருவதால், ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றி வரும் அதிகாரிகள் மற்றும் பதவி உயர்வுகள் பாதிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் பெரிய ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்து புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...