உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: அமைச்சர் சாமிநாதன் பங்கேற்பு

உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். 94,201 ஏக்கர் பயன்பெறும். 120 நாட்களுக்கு 8000 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படும்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று தண்ணீரை திறந்து வைத்தார்.

உடுமலை திருமூர்த்தி அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் பாசனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நான்கு மண்டலங்களாக பிரித்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.



இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம், Dharapuram மற்றும் காங்கேயம் ஆகிய வட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் சூலூர் ஆகிய வட்டங்களில் மொத்தம் 94,201 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடைகின்றன.

திறக்கப்படும் தண்ணீர் இன்று முதல் டிசம்பர் 16 ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு 4 சுற்றுகளில் உரிய இடைவெளி விட்டு 8000 மில்லியன் கன அடி திறக்கப்படுகிறது. தற்சமயம் திருமூர்த்தி அணையின் மொத்த உயரம் 60 அடியில் 57.21 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 889 கன அடியாக உள்ளது. தற்போது பிரதான கால்வாயில் 250 கன அடி திறக்கப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, தலைமை பொறியாளர் முருகேசன், திருமூர்த்தி கோட்டம் செயற்பொறியாளர் மகேந்திரன், திருமூர்த்தி அணை உதவி செயற்பொறியாளர் ஆதிசிவன், உடுமலை கால்வாய் கோட்டம் உதவி செயற்பொறியாளர் பாபு என்கிற சபரீஷ்வரன், திருமூர்த்தி அணை உதவி பொறியாளர் மாரிமுத்து ஆகியோருடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...