மேட்டுப்பாளையம் பகுதிகளில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆகஸ்ட் 19 அன்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை மற்றும் லேசான மழை பெய்தது. வெயில் வாட்டிய நிலையில் பெய்த மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று ஆகஸ்ட் 19 அன்று மேட்டுப்பாளையம் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்துள்ளது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஒரு சில பகுதிகளில் கனமழையும் மற்ற பகுதியில் லேசான மழை பெய்தது. இந்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நிலவிய கடும் வெப்பத்தால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் பெய்த மழை குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியதால், பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...