உதகை மலை ரயில் என்ஜின் நேற்று (ஏப்ரல் 25) பழுதடைந்ததைத் தொடர்ந்து இன்று உதகை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு மலை ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. அடர்ந்த வனப்பகுதியின் வழியாக மலை ரயில் செல்லும் ரம்மியமான அனுபவங்களைப் பெற தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவர்.
மேலும், தற்போது கோடை விடுமுறையினை முன்னிட்ட நாளொன்றுக்கு ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரி, குன்னூர், உதகை உள்ளிட்ட பகுதிகளில் குவிந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் விரும்புவதும் நீலகிரி மலை ரயில் பயணமே.
இந்நிலையில், நேற்று காலை 282 பயணிகளுடன் மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் ரயில், ஆர்டலி அருகே சென்றுகொண்டிருந்த போது எஞ்சின் உந்து சக்தி குறைவால் ரயில் மலைப்பாதையில் நடுவழியில் பழுதாகி நின்றது.
இதனைத்தொடர்ந்து, குன்னூரில் இருந்து மாற்று என்ஜின் கொண்டுவரப்பட்டு மலை ரயில் மீண்டும் இயக்கப்பட்டு கல்லாரில் நிறுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, ரயில்வேத்துறை ஊழியர்கள் ரயில் எஞ்சினில் ஏற்பட்டுள்ள பழுதினை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் இன்று (ஏப்ரல் 26) மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால், உதகை மலை ரயிலில் பயணம் மேற்கொண்டு மகிழவிருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு மலை ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. அடர்ந்த வனப்பகுதியின் வழியாக மலை ரயில் செல்லும் ரம்மியமான அனுபவங்களைப் பெற தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவர்.
மேலும், தற்போது கோடை விடுமுறையினை முன்னிட்ட நாளொன்றுக்கு ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரி, குன்னூர், உதகை உள்ளிட்ட பகுதிகளில் குவிந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் விரும்புவதும் நீலகிரி மலை ரயில் பயணமே.
இந்நிலையில், நேற்று காலை 282 பயணிகளுடன் மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் ரயில், ஆர்டலி அருகே சென்றுகொண்டிருந்த போது எஞ்சின் உந்து சக்தி குறைவால் ரயில் மலைப்பாதையில் நடுவழியில் பழுதாகி நின்றது.
இதனைத்தொடர்ந்து, குன்னூரில் இருந்து மாற்று என்ஜின் கொண்டுவரப்பட்டு மலை ரயில் மீண்டும் இயக்கப்பட்டு கல்லாரில் நிறுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, ரயில்வேத்துறை ஊழியர்கள் ரயில் எஞ்சினில் ஏற்பட்டுள்ள பழுதினை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் இன்று (ஏப்ரல் 26) மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால், உதகை மலை ரயிலில் பயணம் மேற்கொண்டு மகிழவிருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.