கோவையில் ரக்‌ஷா பந்தன் விழா கொண்டாட்டம்: சகோதர பாசத்தை வெளிப்படுத்திய வடமாநிலத்தவர்கள்

கோவையில் ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ஜெயின் ஸ்வேதாம்பார் கர்தர்கச் சங்க வழிபாட்டு மையத்தில் வடமாநிலத்தவர்கள் ரக்‌ஷா பந்தன் விழாவை கொண்டாடினர். உலக அமைதிக்காக பாடல்கள் பாடி வழிபட்டு, ராக்கி கயிறுகளை கட்டி அன்பை வெளிப்படுத்தினர்.


கோவை: கோவை நகரில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள் ரக்‌ஷா பந்தன் விழாவை உற்சாகமாக கொண்டாடினர். சகோதர சகோதரிகளுக்கு இடையிலான அன்பின் வலிமையை உணர்த்தும் இந்த விழா ஆண்டுதோறும் ஆவணி மாதம் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது.

வட மாநிலத்தவர் அதிகம் வசிக்கும் ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள ஜெயின் ஸ்வேதாம்பார் கர்தர்கச் சங்க வழிபாட்டு மையத்தில் வடமாநிலத்தவர்கள் உலக அமைதிக்காக பாடல்கள் பாடி வழிபட்டனர். உலக அமைதியை முன்னிறுத்தும் விதமாகவும், அமைதியை வலியுறுத்தியும் மேளதாளம் இசைத்து பாடல்கள் பாடி உற்சாகமாக வழிபாடு நடத்தினர்.

வழிபாட்டுக்குப் பின்னர் பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கும், சகோதரர்களாக பாவிப்பவர்களுக்கும் ராக்கி கயிறுகளை கட்டி அன்பை வெளிப்படுத்தினர். பதிலுக்கு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு பணம் மற்றும் அன்பளிப்புகளை வழங்கி அன்பை வெளிப்படுத்தினர்.

கோவை நகரின் பல்வேறு பகுதிகளிலும் ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு ராக்கி கயிறுகளை கட்டி சகோதர, சகோதரிகள் அன்பின் வலிமையை வெளிப்படுத்தினர். வடமாநிலத்தவரின் பண்டிகையான இது தற்பொழுது தமிழகத்திலும் ஆங்காங்கே கொண்டாடப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...