பாலக்காடு கோழிப்பாறை அஹல்யா நீரிழிவு மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம்

பாலக்காடு கோழிப்பாறையில் உள்ள அஹல்யா நீரிழிவு மருத்துவமனையில் ஆகஸ்ட் 20 முதல் 31 வரை இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. பல்வேறு நோய்களுக்கு இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கப்படுகிறது.



Coimbatore: பாலக்காடு அருகே உள்ள கோழிப்பாறையில் அமைந்துள்ள அஹல்யா நீரிழிவு மருத்துவமனையில் ஆகஸ்ட் 20 முதல் 31 வரை இலவச மருத்துவ முகாம் நடைபெறுவதாக மருத்துவமனையின் முதன்மை மருத்துவ இயக்குனர் சுரேஷ் பாபு தெரிவித்தார்.

இந்த முகாமில் பொது அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, நீரிழிவு பாத நோய் சிகிச்சை, எலும்பு நோய் சிகிச்சை ஆகியவற்றுக்கு இலவச ஆலோசனையும், மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. மேலும், பவுத்திரம், மூலம், குடலிறக்கம், விரை வீக்கம், முதுகு வலி, மூட்டு வலி, முதுகு தண்டுவட பிரச்சினைகள் போன்ற நோய்களுக்கும் ஆலோசனையும், சிகிச்சையும் வழங்கப்படுகிறது.



அஹல்யா நீரிழிவு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ இயக்குனர் சுரேஷ் பாபு மற்றும் பொது அறுவை சிகிச்சை பிரிவு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவு, நீரிழிவு பாத நோய் சிகிச்சை பிரிவு, எலும்பு நோய் சிகிச்சை பிரிவு ஆகியவற்றின் முதன்மை மருத்துவர்கள் பொள்ளாச்சியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து இந்த தகவல்களை வெளியிட்டனர்.

அறுவை சிகிச்சைகளுக்கு கட்டண சலுகை வழங்கப்படுவதாகவும் சுரேஷ் பாபு கூறினார். பொதுமக்கள் இந்த இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...