ஆனைமலை முக்கோணம் பகுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கட்சியினர் அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கோவை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆனைமலை வட்டார நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ஆனைமலை முக்கோணம் பகுதியில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
ஆனைமலை நகரத் தலைவர் ஆதம் தலைமையில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழாவில் ராஜீவ் காந்தியின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வட்டார தலைவர் ஜவகர் பாண்டியன், பூபதி, ஷாஜகான், இளங்கோ, நாசர், கலாவதி, தேசிங்கு ராஜா, ஜெகநாதன், பஷீர், அபு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.