கோயம்புத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசனில் 10ம் ஆண்டு விழா கூட்டம் மற்றும் 2017- 18ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆசோசியேசனின் ஆண்டு விழாக் கூட்டத்தின் தலைவர் என்.குருவாயூரப்பன் மற்றும் 2016-17 ஆண்டிற்கான தலைவர் ஆர்.சரவணராஜா இருவரும் பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
இதில் தலைமை விருந்தினராக ஜேசிஐ தேசிய துணைத் தலைவர் ஆர்.எஸ்.பிரபு கலந்து கொண்டு கொசினாவின் 2016-17 ஆம் ஆண்டின் செயல்பாடுகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு மற்றும் புத்துச்சேரி அனைத்துக் கட்டுமான பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் டி.ராகவன் 2017-18 ஆண்டிற்கான நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
2017-18ம் ஆண்டிற்கான தலைவராக ஆர்.கார்த்திக், செயலாளராக ஜே.விஜயகுமார், பொருளாளராக பி.ராஜரத்தினம் உள்ளிட்டு நிர்வாகிகள், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநிலக் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சி.தில்லைராஜன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக செயலாளர் கே.பி.செல்வேள் நன்றியுரை வழங்கினார்.
இதில் தலைமை விருந்தினராக ஜேசிஐ தேசிய துணைத் தலைவர் ஆர்.எஸ்.பிரபு கலந்து கொண்டு கொசினாவின் 2016-17 ஆம் ஆண்டின் செயல்பாடுகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு மற்றும் புத்துச்சேரி அனைத்துக் கட்டுமான பொறியாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் டி.ராகவன் 2017-18 ஆண்டிற்கான நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
2017-18ம் ஆண்டிற்கான தலைவராக ஆர்.கார்த்திக், செயலாளராக ஜே.விஜயகுமார், பொருளாளராக பி.ராஜரத்தினம் உள்ளிட்டு நிர்வாகிகள், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநிலக் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சி.தில்லைராஜன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக செயலாளர் கே.பி.செல்வேள் நன்றியுரை வழங்கினார்.