மத்திய அரசு பணியிடங்களில் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர்கள் நியமனம் குறித்து வானதி சீனிவாசன் கருத்து

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்திய அரசு பணியிடங்களில் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர்களை நியமிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து கோவை தெற்கு தொகுதி திட்டப்பணிகள் குறித்து விவாதித்தார்.



கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்திய அரசு பணியிடங்களில் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர்களை நேரடியாக நியமனம் செய்வது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதிக்கான பல்வேறு திட்டப் பணிகள் குறித்து விவாதித்தார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) மற்றும் மத்திய அரசின் இணைச் செயலாளர்களை இடஒதுக்கீட்டைப் பின்பற்றாமல் நேரடியாக நியமிப்பது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.

வானதி சீனிவாசன் கூறுகையில், "ஒன்றிய அரசின் முக்கிய துறைகளில் திறமையானவர்களை நேரடி நியமனம் செய்கிறார்கள். இது நிரந்தர வேலையாக இல்லாமல், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நேரடி நியமனம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இட ஒதுக்கீடு உள்ளிட்டவை பாதிக்கப்படாது," என்றார்.

மேலும் அவர், "இந்த நாட்டின் பிரதமர், அமைச்சர்கள் என 95% பேர் ஆர்.எஸ்.எஸ் சார்ந்தவர்கள். பாஜக கட்சியின் தேசிய தலைவர்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸ்-ஐ சார்ந்தவர்கள். அரசாங்கத்தையே மக்கள் ஆர்.எஸ்.எஸ் பின்னணி உள்ளவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். எனவே, ஆர்.எஸ்.எஸ் சார்ந்தவர்களை உள்ளே கொண்டு வருகிறார்கள் என்ற கேள்விக்கு இடமில்லை," என்று தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...