உடுமலை வாகன ஓட்டுநர்கள் வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு ரூ.40,886 நிதியுதவி

உடுமலையில் வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கேரளா வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு ரூ.40,886 நிதியுதவி வழங்கினர். மூன்று வாட்ஸ்அப் குழுக்கள் இணைந்து இந்த உதவியை செய்தனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

உடுமலையில் உள்ள ஸ்டார் டிரான்ஸ்போர்ட் வாட்ஸ்அப் குழு, TN 78 வாட்ஸ்அப் குழு, கே.எஸ்.டி வாட்ஸ்அப் குழு ஆகிய மூன்று குழுக்கள் இணைந்து இந்த நிதி உதவியை வழங்கியுள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை வாட்ஸ்அப் குழுக்களில் எழுப்பப்பட்டது.



இதனையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் மொத்தம் ரூ.40,886 நிதி திரட்டப்பட்டது. இந்தத் தொகை கேரளா மாநில முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு உடுமலை பாரத ஸ்டேட் வங்கி மூலம் அனுப்பப்பட்டுள்ளது.



வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் நிதி உதவி அளிக்க முன்வர வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவு ஆறுதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Newsletter

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...