தமிழக அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பத்திரிகையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பத்திரிகையாளர்களுக்கு மாவட்ட அளவில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர்களுக்கு மாபெரும் இலவச மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருகின்ற ஏப்ரல் 27ம் தேதியன்று காலை 8 மணி முதல் மதியம் 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக நாளை நடைபெறவிருந்த பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த மருத்துவமுகாம் விரைவில் நடைபெறும் எனவும், அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர்களுக்கு மாபெரும் இலவச மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருகின்ற ஏப்ரல் 27ம் தேதியன்று காலை 8 மணி முதல் மதியம் 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக நாளை நடைபெறவிருந்த பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த மருத்துவமுகாம் விரைவில் நடைபெறும் எனவும், அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.