அரசியல் களத்துக்கு வந்துள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்து: வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.

கோவை சூலூரில் நடைபெற்ற கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்தார்.



Coimbatore: கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி ஆடை அணிவகுப்பு போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மற்றும் நடிகை நமீதா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய வானதி சீனிவாசன், செய்தியாளர்களிடம் பேசினார். கைத்தறி நெசவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏழாவது ஆண்டாக இப்போட்டிகள் நடத்தப்படுவதாகவும், இந்த ஆண்டு 2,490 மாணவ-மாணவிகள் பங்கேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன், "புதிதாக அரசியல் களத்தில் போட்டியாளராக, சக அரசியல்வாதியாக களம் கண்டுள்ள நடிகர் விஜய்க்கு பா.ஜ.க சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்," என்றார்.

கோவைக்கான திட்டங்கள் குறித்து பேசிய அவர், "தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் கோவைக்கு செம்மொழிப் பூங்கா உள்ளிட்ட நிறைய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் எவ்வளவு விரைவில் முடிக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தே கருத்து கூற முடியும்," என்று தெரிவித்தார்.

தி.மு.க-பா.ஜ.க இடையிலான ரகசிய கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன், "அரசாங்க நிகழ்வுகளை கூட்டணி பார்வையில் பார்ப்பது தவறானது. அரசாங்கங்களுக்குள் உள்ள உறவை அரசியலோடு பொருத்திப் பார்க்கக் கூடாது," என்று கூறினார்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...