கால்நடை பராமரிப்புத் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன - உடுமலை ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட கால்நடை பராமரிப்புத் துறை திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். பொள்ளாச்சி அருகே சாலைப் பணிகள் தொடக்க விழாவில் பங்கேற்றார்.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் ரூ.75 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் முன்னாள் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார்.



நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உடுமலை ராதாகிருஷ்ணன், அதிமுக ஆட்சியில் கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா ஆடுகள், கறவை பசுக்கள், நாட்டுக்கோழிகள் ஆகியவற்றை ஆண்டுதோறும் இரண்டு லட்சம் பேருக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டதாகக் கூறினார்.

பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளின் வாழ்வாதாரம் உயர்வதற்கு இந்தத் திட்டங்கள் முக்கிய காரணமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில் இதுபோன்ற நல்ல திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், தமிழக அரசு கறவை பசு, வெள்ளாடுகள், நாட்டுக் கோழிகள் வழங்கும் திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...