கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் மேற்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். பொதுக் கழிப்பிடம், பள்ளி வகுப்பறைகள், தடுப்பணை உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை பார்வையிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மற்றும் வடக்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இன்று (23.08.2024) நடைபெற்ற இந்த ஆய்வின் போது, பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.





மேற்கு மண்டலத்தில், வார்டு எண் 72-ல் உள்ள ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில் Swachh Bharat Mission திட்டத்தின் கீழ் ரூ.5.30 லட்சம் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பிடம் கட்டும் பணியையும்,





வார்டு எண் 45-ல் சாய்பாபா காலனி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை மற்றும் யோகா பயிற்சி மையம் கட்டும் பணியையும் ஆணையர் ஆய்வு செய்தார்.





வார்டு எண் 37-ல் மருதமலை மாநகராட்சி துவக்கப்பள்ளியில் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி,



வேடபட்டி நரசிம்மபதி குளத்தில் Amrut திட்டத்தின் கீழ் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி ஆகியவற்றையும் ஆணையர் பார்வையிட்டார்.



மேலும், வார்டு எண் 74-ல் வீரகேரளம் பகுதியில் உள்ள கிருஷ்ணம்பதி குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணிகளையும் ஆய்வு செய்தார்.







வடக்கு மண்டலத்தில், வார்டு எண் 19 மணியகாரம்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், NUHM நிதியின் கீழ் ரூ.1.57 கோடி மதிப்பீட்டில் சுகாதார மையம் கட்டும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.





வார்டு எண் 4 சின்னமேட்டுப்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், வார்டு எண் 11 சின்னவேடம்பட்டி ஜனதா நகரில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 250 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ஆகியவற்றையும் ஆணையர் நேரில் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது, மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர்கள் கார்த்திக் செல்வராஜ், பேபிசுதா, முதம், ராமமூர்த்தி, கதிரவேலுசாமி, உதவி ஆணையர்கள் சந்தியா (மேற்கு), ஸ்ரீதேவி (வடக்கு), உதவி செயற்பொறியாளர்கள் சவிதா, எழில், உதவி நகர திட்டமிடுநர் சத்யா, உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், ஹரிபிரசாத், விமலா, இளங்கோ, நாசர், உத்தமன், ரவிக்கண்ணன், சக்திவேல், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், சலைத், லோகநாதன் மற்றும் பிற மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...