கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் மேற்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். பொதுக் கழிப்பிடம், பள்ளி வகுப்பறைகள், தடுப்பணை உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை பார்வையிட்டார்.
கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மற்றும் வடக்கு மண்டல பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இன்று (23.08.2024) நடைபெற்ற இந்த ஆய்வின் போது, பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


மேற்கு மண்டலத்தில், வார்டு எண் 72-ல் உள்ள ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில் Swachh Bharat Mission திட்டத்தின் கீழ் ரூ.5.30 லட்சம் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பிடம் கட்டும் பணியையும்,


வார்டு எண் 45-ல் சாய்பாபா காலனி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை மற்றும் யோகா பயிற்சி மையம் கட்டும் பணியையும் ஆணையர் ஆய்வு செய்தார்.


வார்டு எண் 37-ல் மருதமலை மாநகராட்சி துவக்கப்பள்ளியில் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி,

வேடபட்டி நரசிம்மபதி குளத்தில் Amrut திட்டத்தின் கீழ் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி ஆகியவற்றையும் ஆணையர் பார்வையிட்டார்.

மேலும், வார்டு எண் 74-ல் வீரகேரளம் பகுதியில் உள்ள கிருஷ்ணம்பதி குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணிகளையும் ஆய்வு செய்தார்.



வடக்கு மண்டலத்தில், வார்டு எண் 19 மணியகாரம்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், NUHM நிதியின் கீழ் ரூ.1.57 கோடி மதிப்பீட்டில் சுகாதார மையம் கட்டும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.


வார்டு எண் 4 சின்னமேட்டுப்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், வார்டு எண் 11 சின்னவேடம்பட்டி ஜனதா நகரில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 250 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ஆகியவற்றையும் ஆணையர் நேரில் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது, மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர்கள் கார்த்திக் செல்வராஜ், பேபிசுதா, முதம், ராமமூர்த்தி, கதிரவேலுசாமி, உதவி ஆணையர்கள் சந்தியா (மேற்கு), ஸ்ரீதேவி (வடக்கு), உதவி செயற்பொறியாளர்கள் சவிதா, எழில், உதவி நகர திட்டமிடுநர் சத்யா, உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், ஹரிபிரசாத், விமலா, இளங்கோ, நாசர், உத்தமன், ரவிக்கண்ணன், சக்திவேல், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், சலைத், லோகநாதன் மற்றும் பிற மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
மேற்கு மண்டலத்தில், வார்டு எண் 72-ல் உள்ள ஆர்.எஸ்.புரம் டி.பி. சாலையில் Swachh Bharat Mission திட்டத்தின் கீழ் ரூ.5.30 லட்சம் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பிடம் கட்டும் பணியையும்,
வார்டு எண் 45-ல் சாய்பாபா காலனி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை மற்றும் யோகா பயிற்சி மையம் கட்டும் பணியையும் ஆணையர் ஆய்வு செய்தார்.
வார்டு எண் 37-ல் மருதமலை மாநகராட்சி துவக்கப்பள்ளியில் ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணி,
வேடபட்டி நரசிம்மபதி குளத்தில் Amrut திட்டத்தின் கீழ் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி ஆகியவற்றையும் ஆணையர் பார்வையிட்டார்.
மேலும், வார்டு எண் 74-ல் வீரகேரளம் பகுதியில் உள்ள கிருஷ்ணம்பதி குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
வடக்கு மண்டலத்தில், வார்டு எண் 19 மணியகாரம்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், NUHM நிதியின் கீழ் ரூ.1.57 கோடி மதிப்பீட்டில் சுகாதார மையம் கட்டும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
வார்டு எண் 4 சின்னமேட்டுப்பாளையம் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள், வார்டு எண் 11 சின்னவேடம்பட்டி ஜனதா நகரில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 250 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ஆகியவற்றையும் ஆணையர் நேரில் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது, மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மாமன்ற உறுப்பினர்கள் கார்த்திக் செல்வராஜ், பேபிசுதா, முதம், ராமமூர்த்தி, கதிரவேலுசாமி, உதவி ஆணையர்கள் சந்தியா (மேற்கு), ஸ்ரீதேவி (வடக்கு), உதவி செயற்பொறியாளர்கள் சவிதா, எழில், உதவி நகர திட்டமிடுநர் சத்யா, உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், ஹரிபிரசாத், விமலா, இளங்கோ, நாசர், உத்தமன், ரவிக்கண்ணன், சக்திவேல், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், சலைத், லோகநாதன் மற்றும் பிற மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.