பசுமை புரட்சியினை மேற்கொள்ளும் வைல்டு விங் டிரஸ்ட்

சுற்றுச்சூழல் ஆர்வலர் அமைப்பான வைல்டு விங் டிரஸ்ட், வன விலங்குகளை பாதுகாத்தல், சுற்றுப்புறத் சூலளை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது. மேலும், மலைவாழ் மக்களின் கல்விக்காகவும், இயற்கை குறித்தான விழிப்புணர்வையும் இந்த அமைப்பு பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகிறது.

தற்போது, கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து பசுமை புரட்சியினை மேற்கொள்ள வைல்டு விங் டிரஸ்ட் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து வைல்டு விங் டிரஸ்ட் சரவணன் சிம்ப்ளிசிட்டி நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வைல்டு விங் டிரஸ்ட் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சுமார் 8000 ஆயிரம் செடிகளை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் வளர்த்து வருகிறோம். இதில் 23 வகைச் செடிகள் நம் நாட்டுச் செடிகள் ஆகும். இவை மூன்று மாதத்தில் சுமார் 6 அடி வரை வளர்ந்து விடும். 

பின் இதனை வரும் மழைக்காலத்தில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது கல்லூரி வளாகத்தில் உள்ள 8 ஆயிரம் செடிகளுக்கும் குமரகுரு கல்லூரி நிர்வாகமே இடத்தினை ஒதுக்கி தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். 

எங்களது இந்த முயற்சிக்கு கல்லூரி நிர்வாகத்தினரும், வைல்டு விங் டிரஸ்ட் உறுப்பினர்களும் சிறந்த முறையில் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்" என்றார்.

வைல்டு விங் டிரஸ்ட்-யின் இந்த பசுமை புரட்சி முயற்சி வெற்றி பெறவும், இந்த பூவுலகம் பசுமையடைந்து வனமும் வளமும் பெறுக நமது சிம்ப்ளிசிட்டியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...