கோவையில் 'கனவு தமிழ்நாடு' இயக்கத்தின் 'அரசியல் அறிவு' அமைப்பின் முதல் பயிலரங்கு நடைபெற்றது

கோவையில் 'கனவு தமிழ்நாடு' இயக்கத்தின் "அரசியல் அறிவு" அமைப்பின் முதல் பயிலரங்கு நடைபெற்றது. "உள்ளாட்சி அரசு" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பயிலரங்கில் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் கலந்து கொண்டார்.



கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மசக்காளிபாளையம் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் 'கனவு தமிழ்நாடு' இயக்கத்தின் "அரசியல் அறிவு" என்ற அரசியல் பயிற்றுவிப்பு அமைப்பின் முதல் பயிலரங்கு இன்று நடைபெற்றது.



"உள்ளாட்சி அரசு" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த முன்னோட்ட பயிலரங்கில் 'கனவு தமிழ்நாடு' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி கட்டமைப்பின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து காணொளி காட்சிகள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. பயிலரங்கின் இறுதியில் கேள்வி-பதில் நிகழ்வும் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் பேசிய சுரேஷ் சம்பந்தம், "தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்க, பல துணைக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டி உள்ளது. அதில் ஒரு கட்டமைப்பு என்னவென்றால், அரசியல் தெளிவு மிக்க இளைஞர்களை அரசியல் நோக்கி கொண்டு செல்வது. அத்தகைய இளைஞர்கள் சட்டசபையிலும் நாடாளுமன்றத்திலும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையும் தமிழ் மக்களின் முன்னேற்றத்தையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சட்டம் இயற்றுவார்கள் என்ற குறிக்கோளோடு இளைஞர்கள் மத்தியில் அரசியல் அறிவைக் கொண்டு சேர்ப்பதே இந்த 'அரசியல் அறிவு' அமைப்பு" என்று கூறினார்.

மேலும் அவர், "இது ஒரு அரசியல் பயிற்றுவிப்பு அமைப்பு. ஒரு சேப்டருக்கு 50 பேர் வீதம் தொகுதிக்கு பத்து சேப்டர்களை உருவாக்க உள்ளோம். இவ்வாறு தொகுதி வாரியாக அரசியல் தெளிவு மிக்க 500 இளைஞர்களை உருவாக்கும்போது அவர்கள் மற்றவர்களிடம் இதைக் கொண்டு சேர்ப்பார்கள்" என்றும் தெரிவித்தார்.

இந்த முன்னோட்ட பயிலரங்கில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அரசியல் அறிவு அமைப்பின் அடுத்த பயிலரங்கு 'சட்டமன்றம்' என்ற தலைப்பில் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி சிங்காநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...