கோவையில் தோல் தான விழிப்புணர்வு குறும்படத்திற்கான பூஜை நிகழ்வு

கோவையில் தோல் தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 'தேன்மொழி' என்ற குறும்படத்திற்கான பூஜை நிகழ்வு நடைபெற்றது. அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம், ரோட்டரி 3201, கங்கா மருத்துவமனை மற்றும் வோல்ட் மலையாளி கவுன்சில் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.


கோவை: கோவை பந்தைய சாலையில் உள்ள ரோட்டரி 3201 அலுவலகத்தில் தோல் தான விழிப்புணர்வு குறித்த 'தேன்மொழி' குறும்பட பூஜை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை மூத்த வழக்கறிஞர் சுந்தர வடிவேல் துவக்கி வைத்தார்.

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனத் தலைவர் ஆர்.கே.குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைப்பின் பொதுச் செயலாளர் வி.எச்.சுப்பிரமணியம், மாநில மகளிரணி தலைவி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் லதா அர்ஜூனன், மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார், மாவட்டத் துணைத் தலைவர் செந்தில் குமார், வோல்ட் மலையாளி கவுன்சில் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



குறும்படத்தின் இயக்குனர் குமார் தங்கவேல், நடிகை சிவசக்தி, குழந்தை நட்சத்திரம் பேபி ரக்சிதா ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

'தேன்மொழி' குறும்படம், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் கதையைச் சித்தரிக்கிறது. தனது அழகை இழந்த குழந்தைக்கு, கங்கா மருத்துவமனையின் தோல் தான மையம் எவ்வாறு உதவி புரிகிறது என்பதை இக்குறும்படம் விளக்குகிறது. மேலும், தோல் தானத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறது.

ரோட்டரி 3201 ஆளுநர் சுந்தரவடிவேல் கூறுகையில், "இக்குறும்படத்தின் மூலம் கங்கா தோல் தான மையத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்பதையும், ரோட்டரி 3201, அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம், வோல்டு மலையாளி கவுன்சில் ஆகியவை எவ்வாறு உதவுகின்றன என்பதையும் தெளிவாக எடுத்துரைக்க உள்ளோம்," என்றார்.

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் பொதுச் செயலாளர் வி.எச்.சுப்பிரமணியம், "தோல் தான விழிப்புணர்வு குறித்து பொதுமக்களிடம் போதிய அறிவு இல்லை. இக்குறும்படத்தின் மூலம் தோல் தானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க உள்ளோம்," என்று தெரிவித்தார்.

மாநில மகளிரணி தலைவி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் லதா அர்ஜூனன் கூறுகையில், "தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு உண்டு என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த 'தேன்மொழி' குறும்படம் எடுக்கப்பட உள்ளது," என்றார்.

இக்குறும்படம் மூலம் தோல் தான விழிப்புணர்வை பரவலாக ஏற்படுத்தி, கங்கா மருத்துவமனை நடத்தி வரும் தோல் சேமிப்பு மையத்திற்கு உதவ முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...